Friday, October 28, 2011

தமிழ் எனக்கு

தமிழென் மூச்சல்ல, தேனூறும் செவிக்கினிய
தமிழென் பேச்சல்ல; தொன்மொழியே ஆனாலும்
திருவருளால் நான்சுவைக்க அமுதென்பேன் பாட்டிசைப்பேன்
கருநிறவேள் மாணடி மேல்

Saturday, October 8, 2011

பண்டிகைத் திருநாள்

சீர்க்கங்கை நீராடி பூம்பட்டுத் தானுடுத்தி
ஏழ்பிறப்பும் உடனிருக்க மாயவனை நாம்பாடி
பால்திரளை நெய்தோயும் கன்னல்நொய் இவையுடனே
தேந்தமிழ்சொல் சுவைக்குனன் நாள்