Friday, November 25, 2011

இராம!

சொல்லா வகையாய் கொடிதாய் வினைகள்
பல்லா யிரமும் துணிந்தே புரிந்தேன்
வில்லா லிலங்கை அழித்தான் அடிகள்
எல்லா மெனஇருப்பன் இனி

புகநின்ற தனிநா யகனைத் தடுத்தமையும்
அகம்கொண்ட செருக்கதனை நீக்கென் மடநெஞ்சே!
நகம்கொண்டு இரணியனின் மார்வகம் கீண்டான்
நிகமம் புகழடியைப் பாடு!

No comments:

Post a Comment